web log free
September 18, 2025

ரைனா சிக்கினார்


வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவீதியைச் சேர்ந்த நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அவரை படுகொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ரைனா என்றழைக்கப்படும் நபரொருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இரண்டு பாதாள உலகக் கோஷ்டிக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிய மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ரைனா என்றழைக்கப்படும் ஷரிந்து சலேக்க ஷங்கல்ப என்பவர், கொழும்பு-12, சுரியமல்புரவைச் சேர்ந்த 24 வயதான நபராவார்.

இதேவேளை, டுபாயில் மாகந்துரே மதுஷ் என்பவருடன் கைது செய்யப்பட்டுள்ள, வாழைத்தோட்டம் தினுக எனும் பாதாள உலகக் கோஷ்டி தலைவனின், சகாவான ரைனா, பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குற்றவாளியென பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd