நாட்டில் நேற்றைய தினம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், இந்தோனேஷியாவில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் இவ்வாறு தொற்று உறுதியானது.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 880 ஆக உயர்வடைந்துள்ளது.