web log free
July 03, 2025

மீண்டும் ஹிட் ஆன மைத்திரி


புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஊடகவியலாளர்களை புறக்கணித்து விட்டு சென்றுள்ளார்.

மைத்திரிக்கு கிடைத்த பதவி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி போது அவர்களுக்கு எவ்வித பதிலும் வழங்காமல் சென்று மைத்திரி தனது தலை முடியை சரியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சரவை பதவி பிரமாணத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி எவ்வித பதவியும் கிடைக்காமையினால் தனது சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிட்ட பதிவு பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டது.

“கடினமான சவாலை வெற்றிகரமாக வெற்றியீட்டிய பின்னர் அதன்கான பதில் கிடைக்கும் அமைதியான சில காலங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்” என மைத்திரி தனது பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd