web log free
May 10, 2025

சி.விக்கு எதிராக சஜித் அணி குரல்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஷ்வரன், நாடாளுமன்றில் நேற்று (20) ஆற்றிய உரையை,    ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடாதென எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,

“நாடாளுமன்ற உறுப்பினராக நாம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும்போது, நாட்டில் வேறெந்த அரசும் உருவாகுவதற்கு எந்தவொரு வகையிலும் துணைப்போவதில்லை என்றே சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்கிறோம்.

“முழு நாடும் இலங்கையர்கள் என்று தங்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். ஆனால், நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய சீ.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் பூர்விகக்குடிகள் தமிழர்கள் என்றும், தமிழ்மொழியே இலங்கையில் முதலில் தோன்றிய மொழி எனவும் கூறியிருந்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd