web log free
September 08, 2024

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் வியாழன் விவாதம்


அரசியலமைப்பு பேரவை தொடர்பில், பாராளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை, முழுநாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியினால் இந்த விவாதத்துக்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இன்று(20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிக்கள், அரசியலமைப்பு பேரவை தொடர்பிலான விவாதத்தின் போது, பல இரகசியங்களை அம்பலப்படுத்துவோம் என அறிவித்துள்ளனர்.