web log free
April 07, 2026

பழைய தொழில்செய்த மூன்று பெண்கள் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெடிகந்தபார பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கல்கிஸை பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, விபசார விடுதியின் முகாமையாளரான பெண் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை, புஸ்ஸ மற்றும் மீகஹாதென்ன ஆகிய பகுதிகளை சேர்ந்த 27, 32 மற்றும் 36 வயதுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான குறித்த பெண்கள் கல்கிஸை நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd