web log free
July 04, 2025

டிமிக்கி கொடுத்தார் பெண் கைதி

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற பெண் கைதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து, ஹொரணை பகுதியில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கைதி, கூரையை பிரித்து நேற்று (08) பிற்பகல் தப்பிச்சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை பமுணுகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், 1300 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd