web log free
March 28, 2024

294 கிலோ கிராம் ஹெரோய்ன் சிக்கியது

களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 294 கிலோ 49 கிராம் நிறைகொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியவில் வைத்தே இந்தப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

அதிரடிப் படையினரும், பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்தே, இந்த போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் உள்நாட்டு பெறுமதி 3 பில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது. 

Last modified on Wednesday, 11 September 2019 01:43