web log free
April 19, 2024

'விரைவாக விசாரியுங்கள்'

போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் காணப்படும் சட்டங்கள் மாத்திரம் போதுமானது அல்ல என, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தெரிவித்துள்ளார்.

கொடக்காவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

நாட்டின் இதயமாக பார்க்கப்படும் நாடாளுமன்றத்துக்குள் உள்ள உறுப்பினர்களுக்கு இடையில் போதைபொருள் பாவனையில் ஈடுபடும் சில உறுப்பினர்கள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் மிக விரைவில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.