web log free
April 24, 2024

மஹிந்தானந்த அலுத்கமகேவின் மகன் கைது


நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் மகன், கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, பம்பலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸ் நிலையத்தின் ​​போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, தப்பிச் சென்ற டிப்​பெண்டர் ரக வாகனத்தில் பயணித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் ​கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.