web log free
April 24, 2024

ஏழுவரில் இருவருக்கு இன்றுவரை விளக்கமறியல்


பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதி தள்ளிவிட்டு, தப்பிச்சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரில் எழுவர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவ்வாறு நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்ட, ஏழுவரில், ஐந்து பேர், தங்களுக்கான நிபந்தனையை பூர்த்திச் செய்யவில்லை. அதனையடுத்து, அந்த ஐவரும், இன்று (26) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 26 February 2019 02:18