web log free
April 26, 2024

சனத்துக்கு ஐ.சி.சி தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி.தடைவிதித்துள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாதென ஐ.சி.சி.யினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல், மோசடி எதிர்ப்பு பிரிவின் விசாரணையையடுத்தே ஐ.சி.யி.யினால் இந்த தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.