web log free
April 26, 2024

அரசாங்கத்துடன் கூட்டமைப்பு நாளை பேச்சு


அரசாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை வியாழக்கிழமை முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தே மீண்டும் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இடம்பெறவுள்ளதாக கூறப்படும் மேற்படி சந்திப்பில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.