web log free
January 30, 2026

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2193 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 201பேர் கைது மற்றும் 31 வாகனங்களும் கைப் பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊர டங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2193 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 338 வாகனங் களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக இதுவரை 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd