web log free
September 09, 2025

மேலும் இருவர் உயிரிழந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் இன்று (11) உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, களனி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபர், கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 01ஆம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட சுவாசிப்பதில் சிரமம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd