web log free
September 08, 2024

வர்த்தகர் இருவர் படுகொலை: பொலிஸார் இருவருக்கு விளக்கமறியல்


காலி, ரத்கமவைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவரைக் கடத்திச் சென்று படுகொலை செய்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸார் இருவரும், எதிர்வரும் 13 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கான உத்தரவை, காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குணவல, இன்று (27) பிறப்பித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.