web log free
April 25, 2024

மதூஷின் விளக்கமறியல் நீடிப்பு


பாதாள உலகக் குழுத் தலைவராக அறியப்படும் மாகந்துரே மதூஷ் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரின் மகனான நதீமால் பெரேரா உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்கள்  நேற்றைய தினம் டுபாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டதாக டுபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாய் பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடையாத காரணத்தினால், அவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:42