web log free
April 24, 2024

வடக்கில் புதிதாக 850 தமிழ் பொலிஸார்

வடக்கில் 850 தமிழ் பொலிஸாரை புதிதாக சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைந்துகொள்ள முன்வரவேண்டும்.

இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினருமே உள்ளனர்.” என்றார்.

அத்துடன், இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபரை, வடக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.