web log free
September 10, 2025

வெள்ளக்காடாக மாறியுள்ள யாழ்ப்பாணம்

புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
 
யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd