web log free
December 05, 2025

9 ஆயிரம் அதிகாரிகள் கடமையில்

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற போக்குவரத்து சுற்றிவளைப்புகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரையில் தொடரும் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக 9 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் , இந்த சுற்றிவளைப்புகளில் இதுவரையில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் கடந்த தினத்தில் ஏற்பட்ட 60 விபத்துக்களில் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 22 December 2020 06:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd