web log free
September 10, 2025

கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தங்கொட்டுவ பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்று  நியூமோனியா, குருதி விசமானமை மற்றும் கடுமையான லுகேமியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு - 07 பகுதியை சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் கடந்த 20ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நியூமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd