web log free
December 12, 2025

ஜே.வி.பி மஹிந்தவுடன் பேச்சு

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மக்கள் விடுதலை முன்னணி கலந்துரையாடவுள்ளது.

நாளை மறுதினம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறும் என, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் நாளுமன்ற கால எல்லைக்கு முன்பாகவே பொது தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 11 September 2019 01:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd