web log free
May 13, 2026

சுகாதார நடைமுறைகளுடன் புத்தாண்டு ஆராதனை

இலங்கையில் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னைய வருடங்களில் தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் நடத்தப்பட்ட போதும், தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் இந்த வருடம் நள்ளிரவு ஆராதனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் இன்று காலை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரை கொண்டு தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் அந்த ஆராதனைகளில் கலந்துகொண்டனர்.

ஆராதனை நிகழ்வுகளின் போது, பொலிஸாரும் மற்றும் இராணுவத்தினரும் தேவாலய பகுதிகளில் விசேட பாதுப்பை வழங்கியிருந்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd