web log free
April 25, 2024

வரவு – செலவுத் திட்டம் 2019 (Live)

பாராளுமன்றம் நாளைக் காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மார்ச் 08ஆம் திகதிக்கு முன்னர் திருத்தங்களை, பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சமர்ப்பிப்பார் என சபாநாயகர் தெரிவித்தார்

04.19 - இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு சமர்ப்பிப்பை,  நிதியமைச்சர் நன்றி கூறி, நிறை செய்துகொண்டார்

04:17 PM - நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது

04:17 PM - உள்நாட்டு சாராய உற்பத்திகளின் விலைகள், இன்று நள்ளிரவில் திருத்தம். கள்ளு  விலையில் மாற்றமில்லை

04:17 PM - கெசினோ அனுமதிக் கட்டணம் 50 டொலரால் அதிகரிப்பு

04:16 PM - சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு

04:15 PM - மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ரூபாய்  ஒடுக்கீடு

04:14 PM - யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ரூபாய் ஒடுக்கீடு

04:13 PM - புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

04:12 PM - - அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் 100 ரூபாயால் அதிகரிப்பு

04:10 PM - வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு

04:06 PM - இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்

04:00 PM - இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை . அனர்த்த முகாமைத்துவம் - உயர் இடர் வீடமைப்புக்கான புதிய வீடமைப்பு திட்டம்

03:59 PM - கலைஞர்களின் வருமானத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

03:59 PM - பிளாஸ்ரிக், பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வது அவசியம்

03:57 PM - சமுர்த்தி அபிவிருத்திக்கு 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:55 PM - சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீளக் கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்க நடவடிக்கை

03:53 PM - இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:51 PM - குடிநீர்த் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:47 PM - கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:46 PM - புதிய ரயில் பாதைகள் 4 அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகுரக ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:45 PM - ஜூலை முதலாம் திகதியிலிருந்து அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு

03:45 PM - அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பு, ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:43 PM - முச்சக்கரவண்டிகள், சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறை அறிமுகம். தற்போதைய பாவனையிலுள்ள பளுதடைந்த முச்சக்கரவண்டிகளை அகற்ற நடவடிக்கை

03:41 PM - அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு 40 பில்லியன் ஒதுக்கீடு

03:39 PM - உள் வீதிகளைப் புனரமைப்புச் செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:37 PM - மனித - யானை மோதலைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது

03:37 PM - கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:36 PM - போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், ஒருங்கிணைந்த பேருந்துகள் நவீனமயமாக்கல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை

03:35 PM - பொகவம்ப சிறைச்சாலை ஒரு பொதுவான இடமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது

03:35 PM - யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்புச் செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, கண்டியை அபிவிருத்தி செய்ய 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:34 PM - கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:33 PM - புத்தளம், அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:30 PM - தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை

03:29 PM - கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:25 PM - சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு

03:21 PM - விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகள்

03:20 PM - பொருளாதார அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள்

03:19 PM - நிதி வசதி இல்லாமல் பல்கலைக்கழக கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு “மை பியுச்சர்” திட்டத்தின் கீழ் 1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வசதி வழங்கப்படும்

03:19 PM - ஆரம்ப புனர்வாழ்வுக்காக 1,625 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:18 PM - பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கென 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:17 PM - கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு

03:15 PM - ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை

03:14 PM - நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்.

03:13 PM - இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு

03:12 PM - வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணம் 50% குறைப்பு

03:10 PM - பாடசாலைகளின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:10 PM - தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:09 PM - வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்

03:09 PM - துறைமுகங்கள் மற்றும் விமானங்களுக்கு வரி 2.5% குறைப்பு

03:07 PM - சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை

03:06 PM - தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்

03:01 PM - சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, கைவினைப் பொருட்களைச் செய்யும் மத்திய நிலையத்தை, தொம்பே கிராமத்தில் அமைக்க நடவடிக்கை. இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:00 PM - விவசாய நிலங்களை, சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து, அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் அமைக்க நடவடிக்கை

02:57 PM - வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

02:54 PM - சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு, என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ், பாதுகாப்பு நிவாரண நிதி வழங்கல்

02:53 PM - வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு “சீனமாளிகா கடன் திட்டம்” அறிமுகம்

02:53 PM - 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை, 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில், இளம் தம்பதிகளுக்கு வழங்க நடவடிக்கை

02:51 PM - வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைப்புத் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஒதுக்கீடு

02:49 PM - போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில், சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

02:48 PM - தனியார் தாய்மார்களுக்கு 3 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்குவதை ஊக்கப்படுத்துகிறது

02:47 PM - சிறுநீரக நோயாளிகளுக்கு குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை. இதற்காக 1,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

02:46 PM - அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

02:45 PM - மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

02:45 PM - அனைத்து கிராமப்புறக் குழந்தைகளுக்கும் இலவச பால் வழங்கப்படும்

02:40 PM - பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்கக் கொடுக்கப்படும்

02:39 PM - 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

02:34 PM - மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளது

02:33 PM - பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவான தீர்வு பெறப்படும்

02:31 PM - கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை

02:30 PM - தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும்

02:29 PM - இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை

02:28 PM - விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும்

02:25 PM - சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

02:21 PM - என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை

02:05PM - நிதியமைச்சர் உரையாற்றுகின்றார்

02:02PM - வரவு – செலவுத்திட்ட பிரேரணையை, நிதியமைச்சர் தற்போது சமர்பித்துவருகின்றார்

2:00PM -  இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்காக, நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளார்

2019ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

இலங்கையின் 24 ஆவது நிதியமைச்சர் மங்கள சமரவீரராவார்

சுதந்திர இலங்கையின் 73 ஆவது பட்ஜெட்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட்

பாராளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

கிராமசேவர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தால் பாராளுமன்ற வீதியில் வாகன நெரிசல்

Last modified on Wednesday, 11 September 2019 01:41