web log free
June 28, 2026

ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதுடன் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வன்முறையை தூண்டும் வகையில் ட்ரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றியதையடுத்து, டுவிட்டர் நிறுவனம் குறித்த பதிவுகளை நீக்கியுள்ளதுடன், கணக்கையும் முடக்கியுள்ளது.

நேற்று மாலை முதல் 24 மணித்தியாளங்களுக்கு இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ட்ரம்ப் வாஷிங்டனில் நடைபெற்றுவரும் வன்முறையை தூண்டும் வகையில் நேற்று காலை பதிவிட்ட மூன்று பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் மீண்டும் இவ்வாறு டுவிட்டர் விதிகளை மீறும் விதத்திலான நடிவக்கைகளில் ட்ரம்ப் ஈடுபட்டால், அவரின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் குறித்த பதிவுகள் பேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளன.

ட்ரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அவ்வாறு ட்ரம்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுமாயின் அது அவருக்கு மிகப்பெறிய இழப்பை ஏற்படுத்தும்.

இதேவேளை, ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை வீட்டிற்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருந்த போதும், தேர்தல் மோசடி பற்றிய தவறான கூற்றுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd