web log free
December 05, 2025

பாராளுமன்றக் கட்டடத்தில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், பாராளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் Capitol கட்டடத்திற்கு அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடியபோது ஆர்ப்பாட்டம் மூண்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியதோடு துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயார் நிலையில் இருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செனட் சபைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், ஜனாதிபதி தேர்தலில் டிரம்பே வென்றதாக முழக்கமிட்டார்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) உட்பட செனட் சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் பொலிஸாரின் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து வெளியேறினர்.

பைடனின் வெற்றியை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்துவதை செனட் சபை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd