web log free
December 05, 2025

”மாகாண சபை முறைமையில் மாற்றம் கூடாது”

மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யாது அதனை தற்போது உள்ளவாறே பேண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று, பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே சஜித் பிரேமதாஸ இதனை கூறியுள்ளார்.

நாங்கள் 13 ஆவது திருத்தத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். அது நாட்டில் இறைமைக்கு பாதிப்பை இல்லை என்று உயர்நீதிமன்றமே கூறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யக் கூடாது. அது தற்போது உள்ளவாறே பேணப்பட வேண்டுமென்பதே எமது கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி மாகாண சபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, அதனை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd