web log free
September 10, 2025

மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மாவட்டத்தின்  சில பகுதிகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொட்டாஞ்சேனை, பாபர் வீதி, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள், கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெடேவத்தை பகுதி  ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொட்டாஞ்சேனை பொலிஸ்  பிரிவு கடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd