web log free
January 31, 2026

மாடுகளுக்கிடையே பரவும் புதிய வகை வைரஸ்

இலங்கையில் மாடுகளுக்கிடையே புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

‘கெஃப்ரி பொன்ஸ்’ என்ற வைரஸ் ஒன்றே இவ்வாறு பரவி வருகின்றது என கண்டறியப்பட்டுள்ளதாக மிருக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பொலனறுவை, அநுராதபுரம், கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான மாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொற்றுக்கு உள்ளான மாடுகளின் உடலில் காயங்கள் மற்றும கட்டிகள் ஏற்படுதல், காய்ச்சல், உணவுகளை தவிர்த்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்பதுடன், தொற்றுக்குள்ளாகியுள்ள பசுக்களிடமிருந்து பால் சுரப்பது வெகுவாக குறைவடையும் அதேவேளை, பசுக்கள் கர்ப்பம் தரித்தலும் குறைவடையும் என கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாடுகளுக்கு இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அது தொடர்பில் அரச மிருக வைத்தியருக்கு அறிவிக்குமாறு மாடு வளர்ப்பவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd