web log free
March 27, 2026

பிரத்தியேக வகுப்புகள் 25 முதல் மீள ஆரம்பம்

எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி முதல், பிரத்தியேக வகுப்புகளை மீள ஆரமபிக்க தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

சுகாதார வழிமுறைகளைப் பேணியவாறு குறித்த கல்வி நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி முதல் இந்து, முஸ்லிம், கத்தோலிக்க, பௌத்த மத கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, புத்தசாசன, மத விவகார மற்றம் கலாசார் அமைச்சு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் இவ்வாறு மாணவர்களின் மத மற்றும் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd