web log free
March 27, 2026

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடைவிடாது போராட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலைமை தொடர்கின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd