web log free
December 05, 2025

மேலும் நால்வர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று(09) தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.

கல்கிஸையை சேர்ந்த 74 வயது பெண், காத்தான்குடியை சேர்ந்த 64 வயது ஆண், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 76 வயது ஆண் மற்றும் ஒப்பநாயக்க பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd