web log free
May 13, 2026

மேலும் 3 கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் 62 வயது ஆண் கைதி ஒருவர், கொழும்பு 14ஐ சேர்ந்த 80 வயது பெண், இரத்தினபுரியை சேர்ந்த 64 வயது ஆண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd