web log free
September 08, 2024

டிபென்டர் சாரதிக்கு மீண்டும் விளக்கமறியல்

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை மோதி விபத்துக்குள்ளாகிய சாரதியின் விளக்கமறியல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான சாரதியை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கொழும்பு, பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு டிப்பெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

அதிகாலை 4.35 மணியளவில் கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி இந்த விபத்துக்கு உள்ளாகியிருந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத் சந்திர, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, டிபென்டர் வாகனத்தை செலுத்திய சாரதி இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.