web log free
March 27, 2026

பாடசாலைகள் மீண்டும் மூடப்படுமா? இது தொடர்பில் கல்வியமைச்சு தீர்மானம் வெளியாகியுள்ளது

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளை மூடுகின்ற முடிவுக்கு கல்வி அமைச்சு இதுவரையில் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை சில சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் பாடசாலைகளை நடத்தும் விதம் குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகம்கொடுக்கும் விதம் குறித்து, கடந்த 23ஆம் திகதி, வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, 50 வீத மாணவர்களுடன் பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலதிக வகுப்புக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd