web log free
December 06, 2025

கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக ஏப்ரல் 30ம் திகதி வரை பாடசாலைகளை மூட தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்துபாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து மேலதிக வகுப்புக்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகள் மற்றும் அறநெறி பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முன்பள்ளிகள் மற்றும் அறநெறி பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(27) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd