web log free
March 27, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு அருகில் இன்று ((30)இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, முஜிபுர் ரஹ்மான் உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபர் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

‘அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே இந்த கைது!, ரிஷாட் பதியுதீனின் கைது அரசியல் பழிவாங்கலாகும்! ரிஷாட் பதியுதீனுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!’ போன்ற பதாதைகளுடன் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd