web log free
December 06, 2025

கடலில் மின்னல் தாக்கி இருவர் மீனவர்கள் பலி

அம்பாறை மாவட்டம், கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் இருந்து, கடலுக்கு சென்ற மீன்பிடிப் படகு ஒன்று, மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதில், இரண்டு மீனவர்கள் பலியாகினர்.

மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மீன்பிடிப் படகு நேற்று (30) அதிகாலை கடலுக்கு சென்றபோது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள், நேற்று (30) பிற்பகல் கரைக்கு கொண்டுவரப்பட்டு, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரும், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd