web log free
September 08, 2024

“பாதீடு மக்களை அழுத்துகிறது”

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த வரவு - செலவுத் திட்டத்தின் விளைவை எதிர்காலத்தில் மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்க்காமல் சபையில் இருந்து வௌியேறியமை துரதிருஷ்டவசமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.