web log free
September 08, 2024

ஒரே நாளில் காணி பதிவு

எதிர்வரும் 16 ஆம் திகதி காணிகளை துரிதமாக பதிவு செய்யும் சேவை, ஆரம்பமாகவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பத்தரமுல்லை உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதற்கு அமைவாக இதே தினத்தில் 45 பிரதேச செயலகங்களில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது காணி பதிவுக்கான ஒரு நாள் சேவையும் புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழான திருமண மற்றும் மரண சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 16 ஆம் திகதி ஆரம்பிக்கபடுவதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.