Print this page

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைபடுத்தல் ஊரடங்கை மீறிய குற்றசாட்டிற்காக இன்று காலை 6 மணி வரையான 24மணி நேரத்திற்குள் மொத்தமாக 502 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தக் குற்றச்சாட்டிற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல் இன்று வரை 56,796 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் மேல்மாகாணத்தில் உள்நுழையும் மற்றும் வெளியேறும் எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடிகளில் நேற்று 757 வாகனங்களில் பயணித்த 1,509 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 23 August 2021 04:46