web log free
September 08, 2024

ஐந்தில் ஒன்று போலியானது


காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 சதவீதமானவை போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் ஐந்தில் ஒன்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளை பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்காகவும் வங்கிக்கடன்களை பெறுவது உள்ளிட்ட பல தேவைகளுக்காக இவ்வாறான போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக பதிவாளர் நாயகம் என் சி விதானகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து காணி, பிறப்புச் சான்றிதழ்களை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் முதல், நடைமுறைப்படுத்தப்படும் வகையில், இலங்கை பிரஜைகளின் தகவல்களை கணினி மயமாக்கவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் என் சி விதானகே கூறியுள்ளார்.