web log free
September 08, 2024

திருகோணமலையில் அவுஸ்திரேலிய போர்க்கப்பல்கள்

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் மூழ்கிய அவுஸ்ரேலியப் போர்க்கப்பலை இலங்கை கடற்படையின் உதவியுடன் இணைந்து மீட்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குறித்த கப்பல்கள் வந்துள்ளன.

அவுஸ்ரேலியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கடந்த 11ஆம் திகதி இலங்கைக்கு வந்ததுடன், இந்தக் கப்பல்கள், நேற்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தன.

இந்தக் கப்பல்கள் வரும் 20ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளன.

 

Last modified on Monday, 18 March 2019 03:35