Print this page

ஆதிவாசிகளின் தலைவரின் மனைவி கொரோனாவுக்கு பலி

September 05, 2021

மையங்கனை பகுதியில் ஆதிவாசிகளின் கிராமத்தில் கடந்த மாதம் 27 திகதி 115 பேருக்கு எடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையின் போது 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்நிலையில் ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில எத்தனின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் மையங்கனை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் பொழுது நேற்று அவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உயிரிழந்துள்ளார்.

Last modified on Monday, 06 September 2021 05:28