Print this page

நாடாளுமன்றத்திலிருந்து ராஜினாமா செய்து அதிகாரப்பூர்வமாக மத்திய வங்கி ஆளுநராகிறார் கப்ரால்!

September 13, 2021

சற்று நேரத்திற்கு முன் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் முன்னிலையில் இராஜினாமா செய்துள்ளார். நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தது  இலங்கை மத்திய வங்கி ஆளுநரான W.D. லக்ஷ்மன் அவர்களின் ஓய்வின் பின் பதிலாளுனராக  தான் பொறுப்பேற்கவே என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்கு முன் அனுராதபுரத்தில் மத சடங்குகளில் ஈடுபட்டார். அவர் இந்த வாரம் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 13 September 2021 08:56