web log free
September 11, 2025

திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுபாடு

எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழைய, இரண்டு தடுப்பூசிகளையும் பெறாத நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என திருமண சேவைகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 50 விருந்தினர்களுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சுகாதார பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் அனுமதியை முன்னெடுத்து செல்வதற்கும், சந்தர்ப்பத்தை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்தின் அதிகாரிகள் ஹோட்டல் உட்பட அனைத்து தரபப்பினரிமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பூசிகளை நிராகரிக்கும் 20-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd