web log free
September 08, 2025

பதுங்கியிருக்க உதவிய பெண் கைது

கொலை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, மொரட்டுமுல்ல, கொஸ்பெலன பகுதியில் இடம்பெற்ற மூன்று கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேநபர் பதுங்கி இருப்பதற்கான உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் மிரிஹானை விசேட குற்றத் தடுப்பு பிரிவினரால் இந்த பெண் கைதாகியுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபரான பெண், நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து அனுமதிப் பத்திர வழங்கல் விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து கடந்த 14ஆம் திகதி மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Thursday, 21 March 2019 02:54
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd