web log free
February 01, 2026

டொலர் தட்டுப்பாட்டால் ரூ200 ஐ தாண்டியது சீனி விலை

இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சில நாட்களாக சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் சீனி சுமார் 200 ரூபாய் உட்பட பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், நாட்டுக்கு தேவையான அளவு சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்றும் நாளையும் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன(Lacanta aḻakiyavaṉṉa) தெரிவித்துள்ளார். 

 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd