web log free
September 07, 2025

ஜெப்ரி அலோசியஸ் கைது

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெப்ரி அலோசியஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனை தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனை தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பேர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர், பி.சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்களே குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd