web log free
September 07, 2025

“கடினமான அமைச்சே வழங்கப்பட்டது”

2015 ஆம் ஆண்டு, மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட அமைச்சே தனக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள
அமைச்சர் ரவி கருணாநாயக்க, கட்டியெழுப்புவதற்கு கடினமான அமைச்சு பதவியே தற்போதும் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள அமைச்சினை பொறுப்பேற்ற சிறிது காலத்துக்குள் இனிவரும் அமைச்சர்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத
வகையில், நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்மை அண்மித்த பிரதேசங்களில் உள்ள தொழிலற்ற பெண்களுக்கு, தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயற்றுகையில்
இந்த விடயங்களை அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியிருக்கின்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd